
admin
Feb 2, 2026
உள்ளூர்
விசேட வைத்திய நிபுணர்கள் வழங்கிய உறுதி

தமது சங்கத்தைச் சேர்ந்த எந்தவொரு வைத்தியரும் இன்றைய தினம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதில்லை என விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தமது சங்கத்தின் உறுப்பினர்கள் இன்று (02) வழமை போன்று தமது கடமைகளை முன்னெடுப்பார்கள் என அந்தச் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் விசேட வைத்திய நிபுணர் அசோக குணரத்ன குறிப்பிட்டார்.
கோரிக்கைகளுக்கு அரசாங்கம் சாதகமான பதில்களை வழங்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்றைய தினம் முதல் தமது தொழிற்சங்க நடவடிக்கையைத் தீவிரப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
இன்று முதல் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் விசேட வைத்திய நிபுணர்கள் தொழிற்சங்க நடவடிக்கையொன்றை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக அந்தச் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்தார்.
எவ்வாறாயினும் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையில் தமது சங்கத்தின் உறுப்பினர்கள் எவரும் கலந்துகொள்ள மாட்டார்கள் என விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் விசேட வைத்திய நிபுணர் அசோக குணரத்ன வலியுறுத்தியுள்ளார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






