
Rebecca
Jan 8, 2026
உள்ளூர்
கைதான 23 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 23 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த 27ஆம், 2ஆம் மற்றும் 3ஆம் திகதிகளில் நெடுந்தீவு மற்றும் காரைநகர் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 23 இந்திய மீனவர்கள் கைதாகி இருந்தனர்.
கைதான மீனவர்கள் நேற்று வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது 23 பேரினதும் விளக்கமறியலை எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் மன்று நீடித்துள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






