
admin
Feb 4, 2026
உள்ளூர்
இலங்கை மக்களுக்கு அமெரிக்காவின் வாழ்த்து

அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான ஒத்துழைப்பு பல துறைகளில் எதிர்வரும் காலங்களிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 78வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கை மக்களுக்கு வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்து-பசுபிக் பிராந்தியத்தில் பொதுவான இலக்குகள் மற்றும் தேவைகளின் அடிப்படையில் இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் மேம்பட்டு வரும் கூட்டாண்மைத் திட்டங்கள் குறித்து அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் தேசிய தினத்தை கொண்டாடும் இந்த வேளையில், அந்நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதையிட்டு நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
சுதந்திரமான, பாதுகாப்பான மற்றும் வளமான இந்து-பசுபிக் பிராந்தியத்திற்கான பொதுவான அர்ப்பணிப்பின் அடிப்படையில், அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையே பரஸ்பர மரியாதையுடனான உறவு கட்டியெழுப்பப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் பலமடைந்ததாக சுட்டிக்காட்டிய ரூபியோ, இலங்கையைத் தாக்கிய கடுமையான டித்வா புயலின் பின்னர் அமெரிக்கா வழங்கிய உதவிகளை ஒரு உதாரணமாகக் குறிப்பிட்டுள்ளார்.
டித்வா புயலுக்கு பின்னர் இலங்கை மக்களுக்கு அமெரிக்கா வழங்கிய ஆதரவானது, எமது கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தியுள்ளதை காட்டுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






