
Rebecca
Dec 26, 2025
உள்ளூர்
பாதிக்கப்பட்ட பௌத்த விகாரைகளை புனரமைக்க வியட்நாம் ஆசிரமத்திடமிருந்து நன்கொடை

புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி மற்றும் இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ட்ரின் தி டாம் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (26) முற்பகல் அமைச்சில் நடைபெற்றது.
‘திட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பௌத்த விகாரைகளை புனரமைப்பதற்காக, வியட்நாமின் வுசரஉ டுயஅ பௌத்த ஆசிரமத்தினால் வழங்கப்பட்ட 5000 அமெரிக்க டொலர் நிதி இதன்போது அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார உறவுகளை மேம்படுத்துவது குறித்தும், வுசரஉ டுயஅ பௌத்த ஆசிரமத்தினால் இரு நாடுகளுக்கும் இடையிலான சமய மற்றும் கலாசார உறவுகளை வளர்ப்பதற்காக ஏற்கனவே முன்வைக்கப்பட்ட திட்ட முன்மொழிவுகள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இந்த நிகழ்வில் வுசரஉ டுயஅ பௌத்த ஆசிரமத்தின் பிரதம ஆலோசகர் வணக்கத்திற்குரிய வுhiஉh Phயி ஞரயபெ உள்ளிட்ட தேரர்கள், தூதுவரின் செயலாளர் ரம்யா நிலங்கனி மற்றும் அமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரி கல்ப பெரேரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.






Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






