Search

janani

Mar 30, 2026

உள்ளூர்

மின் தட்டுப்பாட்டைத் தவிர்க்க அதிரடித் திட்டம்

நாட்டில் நிலவும் எரிசக்தி சவால்களை எதிர்கொள்ளும் வகையில், பொதுமக்களை மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்த ஊக்குவிக்கும் "இலங்கையைக் காப்போம்" எனும் தேசியத் திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

எரிசக்தி வளங்களை மிகவும் அவதானமாகப் பேணிப் பாதுகாக்கும் ஒரு சமூகத்தை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் எரிபொருள் விநியோகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்படும் எல்-நினோ காலநிலை மாற்றங்களைக் கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அனைவரும் இதில் பங்களிக்க எதிர்பார்க்கப்படுகின்றனர்.

இரவு 6.00 மணி முதல் 10.00 மணி வரை உள்ள மின்சாரப் பயன்பாடு அதிகமுள்ள நேரங்களில் (Peak Hours), மின் பாவனையை மட்டுப்படுத்துமாறு அல்லது அதிக மின்சாரம் தேவைப்படும் வேலைகளைப் பகல் நேரங்களில் மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All