
Rebecca
Feb 27, 2026
உள்ளூர்
வவுனியா ஓமந்தை பகுதியில் விபத்து : இருவர் காயம்

வவுனியா ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றிருந்ததுடன், ஏ 9 வீதியின் போக்குவரத்தும் சுமார் 03 மணிநேரம் தடைப்பட்டதுடன் நீண்ட வரிசையில் வாகனங்கள் தரித்து நிற்பதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
இவ்விபத்து பற்றி தெரியவருவதாவது,
வவுனியாவில் இருந்து யாழ் நோக்கி எருவுடன் பயணித்த பாரவூர்தி ஓமந்தை பகுதியிலே பழுதடைந்திருந்த நிலையில் தரித்து நின்றிருந்தது.
இந்நிலையில் குறித்த பாரவூர்தியினை பழுதுபார்க்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் போது யாழ் நோக்கி பயணித்த பிறிதொரு பாரவூர்தி குறித்த பாரவூர்தியின் பின் மோதியே இவ்விபத்தானது இடம்பெற்றிருந்தது.
மேலும் இவ்விபத்தானது அதிக விபத்தானது அதிக பனிமூட்டம் காரணமாக இடம் பெற்றிருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதுடன், மேலதிக விசாரணையினை வவுனியா ஓமந்தை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






