Search

Rebecca

Jan 26, 2026

உள்ளூர்

அதிவேக வீதியில் கைவிடப்பட்ட கார்

பூட்டப்பட்டு கைவிடப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான சொகுசு மோட்டார் கார் ஒன்று தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அபரக்க மற்றும் பெலியத்த பகுதிகளுக்கு இடையில் 140ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் அடையாளம் காணப்பட்டது.

இது குறித்து வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் வழங்கிய தகவலுக்கமைய, அபரக்க அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிசார் காரை தமது பொறுப்பில் எடுத்தனர்.

மேலதிக விசாரணைகளுக்கென கார் திஹகொட பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த காரின் பதிவு இலக்கத்தை ஒத்த இலக்கத்தில் இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவருக்கு கார் ஒன்று இருப்பதும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் அவற்றின் என்ஜின் இலக்கம் வெள்வேறானவை என பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் திஹகொட பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All