Search

admin

Jan 26, 2026

உள்ளூர்

போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 851 பேர் கைது

நாடளாவிய ரீதியில் நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 851 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 844 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போது, 184 கிலோ 778 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 116 கிலோ 860 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 02 கிலோ 175 கிராம் கஞ்சா போதைப்பொருளும், 1524 கஞ்சா செடிகளும், 18 கிலோ 615 கிராம் குஷ் போதைப்பொருளும், 01 கிலோ கிலோ கிராம் ஹசீஸ் போதைப்பொருளும், 1592 போதை மாத்திரைகளும், 355 கிராம் 075 மில்லிகிராம் மதனமோதக மாத்திரைகளும், 01 கிலோ 690 கிராம் மாவா போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்டவர்களில் 04 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All