Search

Rebecca

Feb 22, 2026

உள்ளூர்

பொலிஸ் விசேட சுற்றிவளைப்பில் 508 சந்தேகநபர்கள் கைது

பொலிஸாரால் நேற்று (21) நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 28,369 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் 508 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிடியாணை பெற்றவர்கள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் 19

பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் 325

திறந்த பிடியாணை பெற்றவர்கள் 210

மதுபோதையில் வாகனங்களைச் செலுத்தியவர்கள் 226

அலட்சியமாக வாகனங்களைச் செலுத்தியவர்கள் 44

ஏனைய வாகனக் குற்றங்கள் 3,681

குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களைக் கட்டுப்படுத்துவதற்காக, இவ்வாறான விசேட பொலிஸ் நடவடிக்கைகள் நாடு முழுவதும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All