Search

admin

Feb 7, 2026

உள்ளூர்

மட்டக்களப்பில் 3 ரொக்கட் லோஞ்சர்கள் மீட்பு

மட்டக்களப்பு, குடும்பிமலைப் பகுதியில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுவீடன் நாட்டுத் தயாரிப்பான மூன்று ரொக்கட் லோஞ்சர் ரக ஆயுதங்கள் நேற்று (06) மாலை விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். 

பொலன்னறுவை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, குடும்பிமலைப் பகுதியில் அரங்கலாவ விசேட அதிரடிப்படையினரும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

மீட்கப்பட்ட ஆயுதங்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

இச்சம்பவம் தொடர்பில் விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All