
Rebecca
Jan 6, 2026
உள்ளூர்
சுமார் 24 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது

சுமார் 24 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதை பொருட்களுடன் 2 போதைப்பொருள் வர்த்தகர்கள் காத்தான்குடி பொலிஸாரினால் நேற்றிரவு(5) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து 100 கிராம் ஐஸ் மற்றும் 10 கிராம் ஹெரோயின் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
கொழும்பிலிருந்து போதை பொருட்களை கடத்தி வந்து கல்லடியில் உள்ள விடுதியொன்றில் வைத்து விற்பனை செய்து வரும் குறித்தநபர்கள் பிரபல போதை வியாபாரிகள் என தெரிவிக்கப்படுகிறது.
கல்லடியிலிருந்து சம்மாந்துறைக்கு குறித்த போதைப் பொருட்களை எடுத்துச் சென்ற நிலையில் பொலிஸாரினால் இவர்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.
போதைப் பொருட்களை கடத்துவதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த நபர்கள் 26 மற்றும் 29 வயதுடைய நபர்கள் என தெரிவித்த பொலிஸார் வாழைச்சேனையை சேர்ந்தவர்கள் எனவும் மேலும் தெரிவித்தனர்.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






