Search

admin

Feb 7, 2026

உள்ளூர்

கண்டியில் நாளை 22 மணிநேர நீர்வெட்டு

கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை காலை முதல் 22 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

மகாவலி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படவுள்ள பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் அவசர பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்த நீர் விநியோகத் தடை ஏற்படவுள்ளது.

குறித்த நீர்வெட்டு நாளை காலை 6.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 4.00 மணி வரை நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என அந்தச் சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All