
Rebecca
Feb 27, 2026
உள்ளூர்
கல்கமுவ பகுதியில் டிராக்டரில் சிக்கி 15 வயது சிறுவன் பலி!

டிராக்டரில் சிக்கி 15 வயது சிறுவன் ஒருவன் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார்.
கல்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 39 கந்த பகுதியில் நேற்று (26) காலை இச்சிறுவன் டிராக்டரின் சாரதி இருக்கைக்கு அருகில் ஏற முற்பட்ட போது தவறி விழுந்துள்ளார்.
இதன்போது குறித்த டிராக்டரின் சக்கரத்தில் சிறுவன் சிக்கியுள்ளார்.
காயமடைந்த சிறுவன் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்
உயிரிழந்தவர் மஹநான்னேரிய பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் கல்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






