Rebecca
Nov 10, 2025
உள்ளூர்
தலாவையில் பஸ் கவிழ்ந்து விபத்து! 05 பேர் உயிரிழப்பு : 25 பேர் படுகாயம்
அநுராதபுரம், தலாவை, ஜயகங்க சந்திப் பகுதியில் தனியார் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
பஸ் விபத்தில் இதுவரை 05 பேர் உயிரிழந்துள்ளனர். 25 படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர் .
காயமடைந்தவர்களில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களும் அடங்குவதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் தற்போது தம்புத்தேகம மற்றும் தலாவ வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








